1 |
1978 ல் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த திரு.கே.எம்.பெரியசாமி அவர்கள் தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர்.ராதாகிருஷணன் விருது பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்தார். |
2 |
1990 ல் தலைமை ஆசிரியர் திரு.கே.பி.சிவசுப்பிரமணியம் அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்தார். |
3 |
1999 ல் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த திரு.ஏ.பழனிசாமி அவர்கள் தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர்.ராதாகிருஷணன் விருது பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்தார். |
4 |
2008 ல் தலைமை ஆசிரியர் திரு.கே.வெள்ளியங்கிரி அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்தார். |
5 |
1988 ல் இந்திய கலாச்சாரமும் பண்பாடும் என்னும் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார். இப்பாட ஆசிரியர் திரு.சி.பரமசிவம் அவர்கள் பாராட்டுக்குரியவர் ஆவார். |
6 |
1990 ல் சிறப்புத்தமிழ் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடத்தை மாணவர் பெற்றுள்ளார். இப்பாட ஆசிரியர் திரு.ஆர்.நல்லசாமி அவர்கள் பாராட்டுக்குரியவர் ஆவார். |
7 |
2015 ல் சிறப்புத்தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடத்தை மாணவர்கள் பெற்றுள்ளனர். இப்பாட ஆசிரியர் திரு.பி.எஸ்.கோபி அவர்கள் பாராட்டுக்குரியவர் ஆவார். |
8 |
2008 ம் ஆண்டு அகில இந்திய அளவில் நாக்பூரில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் நம் பள்ளி ஆசிரியர் திரு.கே.மோகன்ராஜ் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். |
9 |
நம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற பாரதியார் தின பூப்பந்தாட்டப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தங்கப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். |
10 |
1986 ல் நம் பள்ளி மாணவன் எம்.டி.தண்டபாணி தமிழ்நாடு பூப்பந்தாட்ட அணிக்கு தேர்வு பெற்று அகில இந்திய அளவில் மத்திய பிரதேசத்தில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. |
11 |
35 சாரண மாணவர்கள் 1996 முதல் 2013 வரை ஜனாதிபதி விருது பெற்றதும் 1994 முதல் 2013 வரை 153 மாணவர்கள் ஆளுநர் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். |