Testimonials

TRU.P.C.RAMASAMY

EX. MINISTER, AIADMK.

          1910 ம் ஆண்டு திரு.நாராயண ஐய்யர் அவர்களால் திண்ணைப் பள்ளியாக துவங்கப்பட்ட இப்பள்ளி ஆதிசங்கரரின் அருள் ஆசி பெற்று பல பெரியோர்களின் உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து மிகச் சிறப்பான பள்ளியாக தற்போது இயங்கி வருகிறது. இப்பள்ளி பல சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர் பெருமக்களையும், நீதிபதிகளையும், விஞ்ஞானிகளையும், பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் உருவாக்கிய சிறப்புடையதாகும். 2001 ம் ஆண்டு முதல் விவசாய துறை அமைச்சராகவும் பின்பு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சராகவும் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றினேன். அந்த வாய்ப்பின் அடிப்படையில் நான் பயின்ற இந்த பள்ளிக்கு பெயரும் புகழும் உண்டு. மேலும் இப்பள்ளி வரும் காலங்களில் சிறந்த கல்விப் பணியாற்றிட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.