Testimonials

TRU.S.SELVAKUMARA CHINNAIYAN

MEMBER OF PARLIAMENT, AIADMK ,THATTAM PALAYAM

          அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நமது இந்திய பாராளுமன்றத்தின் உறுப்பினரான திரு.எஸ்.செல்வகுமார சின்னையன் அவர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் இப்பள்ளி பெருமை கொள்கிறது.

இவர் 1968 – 1969 ம் ஆண்டு 6ம் வகுப்பில் இப்பள்ளியில் சேர்ந்து 1973 – 74 ம் ஆண்டு தனது 11ம் வகுப்பு (PUC ) படிப்பை இங்கு நிறைவு செய்தார். பின்னர் தனது பட்டப்படிப்பை (B.Sc) சென்னையில் உள்ள லயோலா கல்லூரியிலும் தனது முதுகலை பட்டப்படிப்பை ( MA Sociology ) வேங்கடேஷ்வரா பல்கலைக்கழகம், திருப்பதியிலும் முடித்தார். பின்னர் சட்டக் கல்வியை (BL) சென்னை சட்டக்கல்லூரியிலும் பயின்றார்.

இப்பள்ளி உடனான இவரது நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

             ‘நான் இப்பள்ளியில் பயின்ற பொழுது திரு.கருப்பண்ணகவுண்டர் அவர்களும் திரு.கே.பி.சிவசுப்பிரமணியன் அவர்களும் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். நான் 6,7 ம்வகுப்புகள் பயின்ற பொழுது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.

   சேவை மனப்பான்மையில் நடத்தப்படும் ஸ்ரீசங்கர வித்யாசாலா பள்ளியில் படிக்கும் பொழுது எனக்குள் ஏற்பட்ட தாக்கம் என்னை ஒரு மக்கள் சேவகனாக மாற்றி உள்ளது.”